இந்து மதத்தவர்களால் மிகவும் முக்கியமாக நம்பப்படுவது தான் அட்சய திருதியை.இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பலமடங்கு பெருகும் என்பது ஓர் நம்பிக்கை. 2023ம் ஆண்டு அட்சய திருதியை எதிர்வரும் 23ம் தேதி ஏப்ரல் ஞாயிற்றுகிழமை வருகிறது.
ஏப்ரல் 22ம்(சனிக்கிழமை) தேதி காலை 09.18 மணி திதி தொடங்கிவிடும். மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திதி இருக்கும்.அன்று செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் மகாலக்ஷ்மியையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

ஏப்ரல் 22 (சித்திரை 9 )அட்ஷய திருதியை அன்று குரு ஓரை காலமான காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையிலும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் வாங்கலாம்.
மற்றும் சுக்கிர ஓரை காலமான காலை 10-11, மாலை 5-6 மணி வரையிலும் ,ஏப்ரல் 23 (சித்திரை 10)ல் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், பின்னர் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம், வெள்ளி பொருட்கள், நகைகள் வாங்கலாம்.