அம்பாறையில் ஹோட்டல் ஒன்றின் மீது குழு தாக்குல்

அம்பாறை வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டல் மீது நேற்று (03.04.2023) குழுவினரனால் தாக்குதல் மேற்கொள்ளப்படுள்ளது .

நேற்றிரவு ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த ஒரு 8 பேர் கொண்ட குழுவினராலேயே ஹோட்டலில் உள்ள பெறுமதியான பொருட்கள் தாக்கப்பட்டு பின்னர் இதைத் தடுத்து நிறுத்த முயன்ற ஹோட்டல் உரிமையாளரிடமும் தர்க்கத்தில் ஈடுபட்டு அவரையும் குறித்த குழுவினர் தாக்கியுள்ளனர்.

இதன் போது காயம் ஏற்பட்ட ஹோட்டலின் உரிமையாளரும் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்களும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இதுவரை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.

எனவே இது தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *