இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணமானது சூரியனில் இருந்து வெளிவருகின்ற கதிர்வீச்சின் அதிக தாக்கமே என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது மட்டும் இன்றி குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது வேகம் காரணமாகவும் இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வானிலை ஆய்வு திணைக்களம் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் தற்போதைய காலப்பகுதியில், இதுபோன்ற நிகழ்வுகள் வழமையானவையாகும்.
என்றபோதும்,இந்த அதிக வெப்ப காலநிலை குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை இலங்கையில் வெப்பம் தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வுகளின் படி தெரியவருகிறது.