பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து….

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சில காலமாக போதைப்பொருள் பாவனை, புகையிலை பொருட்கள் மற்றும் போதையூட்டும் டொபி பாவனைகள் என்பன அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அமில சந்திரசிறி மற்றும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் விரிவுரையாளர் இஷார வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இவ் ஆய்வில் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் ஹெரோயின் போன்ற கடுமையான போதைப்பொருள் பாவனை பதிவாகவில்லை.இருப்பினும் பாடசாலைகளில் தரம் 9 – 10 ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களிடையே இவ்வாறான போதைக்கு அடிமையாகும் அபாயம் அதிகம் என தெரியவந்துள்ளது.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே முறையான தொடர்பாடல் இன்மையே இதன் காரணம் ஆகும் என தெரியவருகின்றது.எனவே இதனை குறைத்து கொள்ள பெற்றோருக்கு அவர் பிள்ளைகளின் செயல்பாடுகளை அவதானிக்கும் படி கேட்டு உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *